/* */

லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி பகுதியில், டிப்பர் லாரி மீது தொழிற்சாலை பேருந்து மோதியதில், 15 ஊழியர்கள் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

லாரி மீது தொழிற்சாலை பேருந்துமோதல் - 15பேர் காயம்
X

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் ஃபாக்ஸ்கான் கம்பெனிக்கு, உதிரிபாகங்கள் தயாரித்து சப்ளை செய்யப்படும் தொழிற்சாலைக்கு, இரண்டாவது ஷிப்ட் பணி முடித்துவிட்டு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் தொழிற்சாலை பேருந்தில், சென்னை - பெங்களூரு மார்க்கமாக சென்று கொண்டிருந்னர்.

காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் தொழிற்சாலை பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 ஊழியர்கள் சிறு மற்றும் பெரு காயங்களுடன் அவதிப்பட்டனர்.

அப்பகுதியாக வந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாலுசெட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’