/* */

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த போக்குவரத்து காவலர்

ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக முத்துக்குமார் என்பவர் பணிபுரிந்த நிலையில் லாரி மோதி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த போக்குவரத்து காவலர்
X

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போக்குவரத்து காவலர் லாரி மோதி பலியான சம்பவத்தில் அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த லாரி மோதியதில் கால் துண்டாகி ரத்த வெள்ளத்தில் போக்குவரத்து காவலர் உயிரிழந்தார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் போக்குவரத்து காவலர் முத்துக்குமரன் (வயது45). இவர் ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் சாலை இனையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் கலவை இயந்திரத்தை இழுத்து வந்த 407 கூண்டு வண்டி பிரேக் நிற்காமல் மோதியதில் முன்னாள் சென்ற கண்டைனர் லாரி என இரு வண்டிகளுக்கிடையே மாட்டி வலது கால் முழுவதுமாக முறிந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தார் .


உடனே அவரை மீட்டு தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். தற்போது பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் போக்குவரத்து காவலர் முத்துக்குமரன் உடல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது லாரி மோதி படுகாயமடைந்து போக்குவரத்து காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சக காவலர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 March 2024 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  3. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  5. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  6. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  7. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  8. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  9. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்