Begin typing your search above and press return to search.
காஞ்சி மாவட்டத்தில்இருடோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 83ஆயிரம் பேர்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 83 ஆயிரத்து 617 பேர் இரு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தபட்டது .
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை 83607 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் கோவாக்கிஸின் தடுப்பூசியை சுமார் 6899 பேரும், கோவீஷீல்டு தடுப்பூசியை சுமார் 76708 பேரும் இரண்டு நிலைகளையும் நிறைவு செய்து உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.