காஞ்சிபுரம் : 861 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 40.72 கோடி கடனுதவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 861 சுய உதவி குழுவை சேர்ந்தவர்களுக்கு ரூ 40.72 கோடி கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் 58,463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7,56,142 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் / நலத் திட்ட உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் திருத்தணியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார் .
அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 861 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 12,055 உறுப்பினர்களுக்கு ரூ.40.72 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் / நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , எழிலரசன் , மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், துணைத்தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ,வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி சார்ந்த பயனாளிகளுக்கு ரூ.9.00/- இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசு பொது சுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவத்துறை ஆய்வாளர்கள், செவிலியர்கள் என 84 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.