லோக் அதாலத் நிகழ்வில் 375 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில் ரூ3.91 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது..
HIGHLIGHTS
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும் ஆன திருமதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று காலை காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிகழ்வினை மாவட்ட நீதிபதி செம்மல் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பி சிவஞானம் முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான நீதிபதி திரு அருண்சபாபதி, கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் , மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமதி ராஜேஸ்வரி , நீதித்துறை நடுவர் இனியகருணாகரன் , காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் எண் 2 திரு.வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மோட்டார் வாகன விபத்து , அசல் வழக்கு , வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு , நில ஆர்ஜித வழக்கு , குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பல்வேறு அமர்வுகளில் வழக்குகள் இரு தரப்பினரும் வரவழைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் சமரசத் தீர்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 375 வழக்குகள் கையாளப்பட்டு அதற்கான தீர்வு வழங்கப்பட்டு இழப்பீடு துணையாக பயனாளிகளுக்கு 3 கோடியே 91 லட்சத்து 28 ஆயிரத்து 320 ரூபாய் காண காசோலைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை வட்டச சட்டப் பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் சத்தீஸ்ராஜா ஏற்பாடு செய்தார்.