/* */

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள் எழுதுகிறார்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 864 மாணவ மாணவிகள், 61 தேர்வு மையங்களில் நாளை தேர்வு எழுதவுள்ளனர்.

HIGHLIGHTS

நாளை 10ம் வகுப்பு பாெதுத்தேர்வு: காஞ்சிபுரத்தில் 15,864 மாணவர்கள் எழுதுகிறார்கள்
X

அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் ( பைல் படம்)

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதலாவதாக பிளஸ் டூ அரசு தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் 50 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து நாளை பத்தாம் வகுப்பு அரசு தேர்வுகள் தொடங்குகின்றன. நாளை தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 61 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

61 தேர்வு மையங்களுங்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் பணியில் இருப்பார். இதைத் தவிர 61 துறை அலுவலர்களும் இவர்களுக்கு உறுதுணையாக தேர்வுப் பணிகளை கவனிப்பர். மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடாக ஈடுபட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளை கண்காணிக்க 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கு பள்ளிக்கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On: 5 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  6. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  7. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  8. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  9. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  10. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!