/* */

தொழிற்சாலையில் மரம் நட வேண்டும் - ஆட்சியர்

தொழிற்சாலையில்  மரம் நட வேண்டும் - ஆட்சியர்
X

சுற்றுசூழலை பாதுகாக்க தொழிற்சாலை வளாகத்தில் மரம் நடவேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து தொழிற்சாலை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தொழிற்சாலை பிரதிநிதிகளிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார். அதன் பின் நிர்வாகிகளிடையே உரையாற்றுகையில் ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாயிரம் தொழிற்சாலைகள் உள்ள நிலையில் தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, மண் மற்றும் உலோக துகள்கள், கழிவுநீரால், நிலம், நீர், காற்று மாசுபடுகின்றன. காற்று மாசுபடுவதை தவிர்க்க, குடியிருப்பு பகுதிகள், சாலையோரத்தில் அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை வளாகங்களில் 25 சதவீத இடத்தில் மரங்களை வளர்த்து பராமரிக்க வேண்டுமென தொழிற்சாலை நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வைத்தார்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரினை முறையாக சுத்திகரிப்பு செய்து அதன் பிறகு தான் வெளியேற்ற வேண்டும். திறந்தவெளி பகுதியிலோ அல்லது மழை நீர் செல்லும் கால்வாய்களிலோ , நீர் ஆதாரங்களிலோ திறந்து விடக் கூடாது. இதனை மீீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

Updated On: 11 Feb 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது