/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: பட்டியல் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: பட்டியல் வெளியீடு
X

பைல் படம்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 6ம் தேதி முதல் கட்டமாகவும், அக்டோபர் 9ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 15ம் தேதியும், வேட்புமனு தாக்கல் கடைசிநாள் 22ம் தேதி, வேட்பு மனு பரிசீலனை 23ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனுவை வாபஸ் இறுதி நாள் 25ம் தேதி , தேர்தல் வாக்கு பதிவு அக்டோபர் 6ம் தேதி மற்றும் 9ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடக்கிறது.

ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆகியோருக்கான மறைமுக தேர்தல் அக்டோபர் 22ம் தேதி நடக்கிறது.

மற்ற காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக அக்டோபர் 9ம் தேதி நடக்கிறது. இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம வார்டுகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

அதேபோல், இரண்டாம் கட்டமாக சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, சங்கராபுரம், தியாகதுருகம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும்அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளது.

Updated On: 13 Sep 2021 3:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  8. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  9. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  10. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!