அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டிற்க்கான பயிற்சியாளர்களின் காலியிடங்களை 100% நிரப்பிட நேரடி சேர்க்கை கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் அந்தந்த தொழிற் பிரிவுகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்கள் உரிய சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளது.
எனவே 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ளவர்கள் அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், உளுந்துார்பேட்டை, 04149-222339, 90801 8712 என்ற தொலைபேசி எண்ணிலும், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சங்கராபுரம் 04151--235258 என்ற எண்ணிலும், முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சின்னசேலம் 9380114610 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.