/* */

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியத்துடன் மின் மோட்டார்

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியத்துடன் மின் மோட்டார் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியத்துடன் மின் மோட்டார்
X

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 3 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மானியம் பெற்று மின் மோட்டார் பம்பு செட் அமைக்க விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் சட்டமன்ற பேரவையில் சிறு,குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டம் தொடர்பாக தனி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உரிய அரசாணை பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு பாசன நீரை இறைத்து புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கவும், திறன் குறைந்த பணி மின் மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் விவசாயிகள் பயன்பெறும் விண்ணப்பம் புதிய மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்குவதற்கு ஒரு மின் மோட்டார் பம்ப் செட்டுக்கு அதிகபட்சமாக ரூபாய் 10,000 மானியமாக வழங்கப்படும்.
எனவே விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் சிறு,குறு விவசாயி சான்றிதழ் அடங்கியுள்ள நிலவரைபடம், மின்சார இணைப்பு அட்டை விவரம் மற்றும் வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகலுடன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தல் வருவாய் கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே/பொ) வேளாண்மை பொறியியல் துறை கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் உபகோட்ட அலுவலகங்களில் விவசாயிகள் நேரில் வந்து உரிய படிவத்தில் மனுக்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வெள்ளிமலை மற்றும் சேலம் வட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே/பொ) வேளாண்மை பொறியியல் துறை என்:3 வெற்றிவேல் காம்ப்ளக்ஸ், தச்சூர் கூட்ரோடு,தச்சூர், கள்ளக்குறிச்சி 606 202 தொலைபேசி எண்: 04151291125 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டம் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே/பொ) வேளாண்மை பொறியியல் துறை 45/72 பெரியார் தெரு, திருக்கோவிலூர் 605 757, தொலைபேசி எண்: 04153 253333 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் கூடுதல் தகவலுக்கு மாவட்ட செயற்பொறியாளர் (வே/பொ) வேளாண்மை பொறியியல் துறை,27/1209 பெரியார் தெரு,வழுதரெட்டி விழுப்புரம்,தொலைபேசி எண்: 04146 294888 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?