/* */

தொடர் மழையால் தியாகதுருகம் பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பின

தொடர் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதி தடுப்பணைகள் நிரம்பி உள்ளன.

HIGHLIGHTS

தொடர் மழையால் தியாகதுருகம் பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பின
X

தியாகதுருகம் பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகள் பாதி அளவிற்கு தண்ணீர் நிரம்பியது. தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி சில தினங்களாக, கல்வராயன் மலையில் பெய்த கனமழை காரணமாக, இரு அணைகளும் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோமுகி ஆற்றில் தோப்பூர், சோமண்டார்குடி, கள்ளக்குறிச்சி, குரூர், விருகாவூர் ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் மணிமுக்தா ஆற்றில் சூ.பாலப்பட்டு, வடபூண்டி, கொங்கராயபாளையம் ஆகிய ஊர்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம், சுற்றுவட்டார ஏரிகளுக்கு நீர் வரத்து கிடைப்பதால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Updated On: 10 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...