Begin typing your search above and press return to search.
சங்கராபுரத்தில் கனமழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தொடர் மழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தொடர் மழை காரணமாக 8 கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்தன. சங்கராபுரம் பகுதியில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக பூட்டை மூப்பனார் கோவில் தெருவில் கிருஷ்ணன், பிள்ளையார் கோவில் தெரு சுரேஷ், எஸ்.குளத்துார் ஆறுமுகம், குப்பன், மல்லாபுரம் தங்கராஜ், வரகூர் முருகேசன், பாவளம் அருணாசலம், கிடங்கன்பாண்டலம் கலியமூர்த்தி ஆகியோரது கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.