/* */

அந்தியூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பழையராசாங்குளம் பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர்-வெள்ளித்திருப்பூர் பிரதான சாலையில் ராசாங்குளம் பிரிவு என்ற இடத்தில் இன்று காலை 8:30 மணிிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அந்தியூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.உடனடியாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதனையடுத்து அரை மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 18 April 2022 4:00 AM GMT

Related News