/* */

பெட்ரோல், விலை உயர்வு : காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மொடக்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர், மக்கள் ஜி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து நடைபயணமாக சென்று, மொடக்குறிச்சி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் பொதுமக்களிடம் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ,மாவட்ட பொருளாளர் ரவி, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை