/* */

ஈரோட்டில் நாளை மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

ஈரோட்டில் நாளை மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை  மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
X

பைல் படம்

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை (மே.04) தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஈரோடு, ஈ.வி.என். ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (மே.04) காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் மற்றும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன் சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு,கவுந்தப்பாடி பகுதிகளைச் சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வைப் பொறியாளரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 May 2022 12:45 AM GMT

Related News