/* */

அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாலுக்கா கமிட்டி உறுப்பினர் செபஸ்தியான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து, இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்தும், சிலிண்டருக்கு பாடை கட்டியும், ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தாலுகா செயலாளர் ஆர் முருகேசன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று எதிர்ப்பை தெரிவித்தனர்.

Updated On: 5 April 2022 10:45 AM GMT

Related News