/* */

கோபி: தற்கொலை செய்து கொண்டவரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயற்சி

கோபி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

கோபி: தற்கொலை செய்து கொண்டவரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயற்சி
X

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதி நகரை சேர்ந்தவர் ஆண்டவர் மகன் தங்கராஜ் (43). கூலி தொழிலாளி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், 10ம் வகுப்பு படிக்கும் ரகுபதி, 7ம் வகுப்பு படிக்கும் அஸ்விந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். தங்கராஜூக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று தங்கராஜுவிற்கும் அவரது மனைவி ஈஸ்வரிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவி ஈஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். ரகுபதியும்,அஸ்விந்தும் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த இரு மகன்கள் பார்த்தபோது, தங்கராஜ் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையறிந்த உறவினர்கள், தங்கராசுவின் உடலை கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தெரியாமல் எரித்துவிட முயன்றனர். தகவல் அறிந்த கோபி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராஜூவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில், குடும்பத்தகராறு காரணமாகவே தங்கராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து தங்கராஜூவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.

தற்கொலை செய்து கொண்டவரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 July 2022 1:02 PM GMT

Related News