/* */

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
X

தீத்தடுப்பு ஒத்திகையில் தீயணைப்பு துறையினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவுறுத்தலின்படி, நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பயிற்சி வழங்கினார்.

இதில் மழை,வெள்ளம் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுவது, தீ விபத்தின் போது தற்காத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பாதுகாப்பு முறைகள் குறித்து வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், பொதுமக்களுக்கு செயல் விளக்கமாக செய்து காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், வட்டாட்சியர் விஜயலட்சுமி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அண்ணாமலை, மண்டல துணை வட்டாட்சியர் மாயழகன், வட்டார வழங்கல் அலுவலர் டேனியல், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், வேலம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Sep 2021 10:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  3. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  4. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  5. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  7. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  8. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  10. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?