/* */

பாறையில் வழுக்கி விழுந்து பெண் பலி : போலீசார் விசாரணை

நந்தனார்புரம் அருகே உள்ள கம்பபாறை குவாரி குளத்தில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைய தேங்கியிருந்துள்ளது.

HIGHLIGHTS

பாறையில் வழுக்கி விழுந்து பெண் பலி : போலீசார் விசாரணை
X

துணி துவைக்க வந்த பெண் பாறையில் வழுக்கி தண்ணீரில் விழுந்து உயிரிழப்பு.

திண்டுக்கல் ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நந்தனார்புரம் அருகே உள்ள கம்பபாறை குவாரி குளத்தில் சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைய தேங்கியிருந்துள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதி நெட்டுதெரு முனிசிபல் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி கம்பபாறை குவாரி குளத்தில் துணி துவைப்பதற்காக கையில் பையுடன் இறங்கிய போது பாறையில் வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அருகில் இருந்த கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தாடிக்கொம்பு காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்த்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்