மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து விசாரணை.
HIGHLIGHTS
திண்டுக்கல் சோலைகால் திரையரங்கு அருகே உள்ள சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு. இவரது மனைவி நாகராணி. இவர்களுக்கு யூகேஸ் 15 என்ற மகனும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இதே பகுதியில் பூர்விக சொத்து உள்ளதாகவும் இந்த சொத்தை பிரித்து தர ரமேஷ் பாபுவின் தந்தை மற்றும் சகோதரர் செல்வ கண்ணன் என்பவர் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரமேஷ் பாபுவின் மனைவி நாகராணி, மகன் மற்றும் மகளுடன் இன்று மாவட்ட ஆட்சியர் இல்லம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்பொழுது பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி விசாரணை செய்தனர். தனது கணவரின் பூர்வீக சொத்தை எனது மாமனார் மற்றும் எனது கணவரின் சகோதரர் செல்வ கண்ணன் ஆகியோர் பிரித்து தர மறுக்கின்றனர்.
இதன் காரணமாக நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு கொடுக்க சென்று அங்கு உள்ள அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துவிட்டு வந்தேன். தற்போது வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (17.08.2021) காலை மாவட்ட ஆட்சியர் இல்லம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தேன். எனது குழந்தைகளுக்கும் எனது மாமனாரின் பூர்வீக சொத்து கண்டிப்பாக பிரித்து தர வேண்டும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எனது கணவரின் சகோதரர் செல்வ கண்ணன் பிரச்சனை செய்து வருகிறார்.எனவே உடனடியாக எங்களது பூர்வீக சொத்தை பிரித்து தர வேண்டும். எனது கணவரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தீக்குளிக்க முயற்சி செய்ததாக நாகராணி கூறினார்.