பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்
அதிமுகவை சோதனை மூலம் மிரட்டிப் பார்க்கும் செயலில் திமுக அரசு இறங்கியுள்ளது. இதைக்கண்டு ஒருபோதும் அதிமுக துவண்டுவிடாது
HIGHLIGHTS
அதிமுகவை சோதனை மூலம் மிரட்டிப் பார்க்கும் செயலில் திமுக அரசு இறங்கியுள்ளது. இதைக்கண்டு ஒருபோதும் அதிமுக துவண்டுவிடாது. திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வீட்டிலும் திமுக அரசு லஞ்ச ஒழிப்பு துறையினரை வைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.இதனை கண்டிக்கும் விதமாக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறியதாவது:திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுகவை, சோதனை என்கிற போர்வையில் மிரட்டுகின்ற வேலையை செய்து வருகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை திசை திரும்ப வேண்டும் என்ற நோக்கில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் அதிமுக துவண்டுவிடாது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் வீறு கொண்டு எழுந்து மக்களுக்கான பணிகளில் அதிமுக தொடர்ந்து ஈடுபடும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன்.