Begin typing your search above and press return to search.
திண்டுக்கல்: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் 2019-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மணி(25) என்பவரை திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி புருஷோத்தமன் குற்றவாளி மணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.