/* */

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

நலவாரிய செயல்பாடுகளை சீர்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் கலாவதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் தெய்வானை, ஆறுமுகம், சண்முகம், ரோஜா மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

கட்டுமான தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கவேண்டும். கட்டுமான தொழிலாளர்களின்‌ குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் அரசாணையை வெளியிட வேண்டும். தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க வேண்டும்.வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீடு வழங்கவேண்டும்.

நல வாரிய செயல்பாட்டை சீர்படுத்த வேண்டும். நலவாரிய ஆன்-லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும். நலவாரிய பதிவிற்கு ஆதார் ஓ.டி.பி. முறையை கைவிட்டு நேரடி பதிவை தொடர வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், கட்டுமான தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 8:30 AM GMT

Related News