/* */

தர்மபுரி 4 ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை: இருவர் கைது

தர்மபுரி 4 ரோட்டில்தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

தர்மபுரி நகரில் பல இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து டிஎஸ்பி வினோத் மேற்பார்வையில் தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது தர்மபுரி 4 ரோடு பகுதியில் காரிமங்கலம் அடுத்த சென்னம்பட்டி யை சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜி என்கின்ற ராஜசேகர் வயது 32. காரிமங்கலம் அரசு மருத்துவமனை முன் பகுதியை சேர்ந்த அமித்பாஷா வயது 32. ஆகிய இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து கொண்டிருக்கும் போது கையும் களவுமாக போலீசார் அவரை பிடித்தனர். அவரிடம் இந்த லாட்டரியை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Updated On: 31 March 2022 5:15 AM GMT

Related News