/* */

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

விருத்தாசலத்தில் ,தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
X

விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் அமித் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் ,விருத்தாசலத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விழிப்புணர்வு பேரணியை சார் ஆட்சியர் அமித் குமார் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ப.மோகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மழைக்காலங்களில் மின் உபகரணங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது, இடி, மின்னல் ஏற்படும்போது பாதுகாப்பான இடத்தில் தங்குவது, மழை பெய்து கொண்டிருக்கும்போது பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது உள்ளிட்ட மழைக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி நகர்ப்புற வீதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

இதில் ,வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியானது நகர்ப்புற முக்கிய வீதிகள் வழியாக சென்று பாலக்கரை சந்திப்பில் நிறைவடைந்தது.

Updated On: 26 Aug 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு