/* */

பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்துக் கொலை-இளம்பெண்ணிடம் விசாரணை

பண்ருட்டி அருகே 4வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

பண்ருட்டி அருகே 4 வயது சிறுவன் அடித்துக் கொலை-இளம்பெண்ணிடம் விசாரணை
X

கொலை செய்யப்பட்ட சிறுவன் அஸ்வித்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தசெந்தில்நாதன்- தனலட்சுமி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஸ்வித் (வயது 4 )

நேற்று மாலை இவன் தனது வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று காணாமல் போனான். தகவலறிந்து அஸ்வித் தந்தை தாய் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அஸ்வித் கிடைக்கவில்லை.

குழந்தை காணாமல் போனது சம்பந்தமாக முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவருக்குசொந்தமான முந்திரி தோப்பில் அஸ்வித் தலை மற்றும் உடம்பில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளான்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக முத்தாண்டிகுப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட ரஞ்சிதா (வயது 24 )என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்,

விசாரணையில் ரஞ்சிதா சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடித்ததாகவும், சிறுவனை அடித்து கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுவன் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 27 Jan 2022 1:24 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்