/* */

கடலூர் அருகே மதுபாட்டில் வயிற்றில் குத்தி இளைஞர் சாவு

கடலூர் அருகே குடிபோதையில் சைக்கிளில் சென்றபோது குடிக்க வைத்திருந்த மதுபாட்டில் குத்தி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கடலூர் அருகே மதுபாட்டில் வயிற்றில் குத்தி இளைஞர் சாவு
X

வெங்கடேஷ்.

கடலூர் அருகே உள்ள சான்றோர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் 28 வயதான இவர் நேற்று அவருடைய நண்பர் ஒருவரின் இறப்புக்கு சென்று வந்து உள்ளார்.

பின்னர் நேற்று மாலை நண்பரின் இழப்பை தாங்க முடியாமல் மது குடித்து விட்டு இரண்டு சாராய பாட்டில்களை தனது வேட்டியில் வைத்து கொண்டு சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். குடி போதையில் வந்த அவர் ஒரு வேக தடையின் மீது ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது அவரின் இடுப்பில் வைத்திருந்த இரண்டு மது பாட்டில்கள் உடைந்து அவரது வயிற்றிலேயே குத்தி இரத்தம் வெளியேற தொடங்கி உள்ளது.

அப்போது அந்த வழியாக வந்த சிலர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அழைத்து வந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் முன்னரே இரத்தம் அதிக அளவில் வெளியேறிய காரணத்தினால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அவரது உடல் உடற்கூறாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து முதுநகர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 13 March 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  3. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  4. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  5. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  6. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  8. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  9. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!