கடலூர் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
கடலூர் வருகை தந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
HIGHLIGHTS
கடலூரில் அதிமுக சட்டமன்ற தொகுதி செயலாளரும் முன்னாள் நகரமன்ற தலைவருமான சி.கே சுப்ரமணியன்-வசந்தி சுப்ரமணியனின் எழுபதாம் ஆண்டு திருமண நாள பீமரத சாந்தி பவள விழாவில் கலந்து கொள்ள கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பண்ருட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான எம்.சி சம்பத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிர்வாகிகளை சந்தித்த பின்பு பீமரத சாந்தி பவள விழாவில் கலந்து கொண்டு தம்பதியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதில் கடலூர் மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.