Begin typing your search above and press return to search.
கடலூரில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கடலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2020-21 ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு உடனே வழங்கிட வேண்டும், குறுவை நெல் கொள்முதல் தடையின்றி நடைபெறுவதற்கு கடந்த ஆண்டு செயல்பட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும், 22% ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடமிருந்து விரைந்து அனுமதி பெற்று கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.