தலைமை ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார்: சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
தலைமைஆசிரியர் மீது ஆசிரியர் பொய் பாலியல்புகார் அளித்தாக சக ஆசிரியர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 42 ஆசிரிய-ஆசிரியைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஜா.சோபியா என்பவர் அண்மையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரிய-ஆசிரியைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் புகார் அளித்தனர். அதில், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்து வருகிறார். எனவே அந்த ஆசிரியையின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.