/* */

தலைமை ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார்: சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

தலைமைஆசிரியர் மீது ஆசிரியர் பொய் பாலியல்புகார் அளித்தாக சக ஆசிரியர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

HIGHLIGHTS

தலைமை ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார்: சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
X

பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரிய-ஆசிரியைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் புகார் அளித்தனர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 42 ஆசிரிய-ஆசிரியைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஜா.சோபியா என்பவர் அண்மையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரிய-ஆசிரியைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் புகார் அளித்தனர். அதில், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்து வருகிறார். எனவே அந்த ஆசிரியையின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 18 March 2022 4:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை