Begin typing your search above and press return to search.
கடலூர்: அரசியலமைப்பு நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
அரசியல் சாசன தினத்தையொட்டி கடலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாரதீய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
HIGHLIGHTS
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளை நினைவு கூறும் விதமாக நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்று கொள்ளப்பட்டு இன்றோடு 72 ஆண்டுகள் ஆகிறது.
இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாக கடலூரில் பா.ஜ.க. கடலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் மாநில பட்டியலணி செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இராம.சிவசங்கர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.