/* */

புவனகிரி அருகே டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை - ஒருவர் சரண்

புவனகிரியில், டிராக்டர் ஏற்றி விவசாயி கொலை செய்த விவகாரத்தில், ஒருவர் கைதான நிலையில், ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

HIGHLIGHTS

புவனகிரி அருகே டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை - ஒருவர் சரண்
X

இறந்த விவசாயி ராமதாஸ்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சக்திவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ், விவசாயியான இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் முன்விரோதம் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம், ராமதாஸ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு தப்பிய ஸ்ரீதர் தலைமறைவாகியதை தொடர்ந்து, ஒரத்தூர் போலீசார் விவசாயி மீது, டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரின் மேல் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர்.

இதனிடையே டிராக்டர் ஏற்றி ராமதாசை கொலை செய்த முதல் குற்றவாளி ஸ்ரீதர், விருத்தாசலம் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். மேலும் அதே பகுதியில் தலைமறைவாக இருந்த மூன்றாவது குற்றவாளியான மகாராஜனை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள இரண்டாவது குற்றவாளியான ஸ்ரீதரின் தந்தை பரமசிவத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மிகக் கொடூரமான முறையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Updated On: 28 Dec 2021 10:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?