/* */

கொரோனா பாதிப்பு - சுகாதார மையங்களில் வால்பாறை எம்.எல்.ஏ. ஆய்வு

ஆனைமலை, சேத்துமடை, காளியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கொரோனா பாதிப்பு - சுகாதார மையங்களில் வால்பாறை எம்.எல்.ஏ. ஆய்வு
X

கோவை மாவட்டம் ஆனைமலை, சேத்துமடை, காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில், கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கோவை மாநகர பகுதிகளில் மட்டுமின்றி, இதர பகுதிகள், கிராமப்புறங்களிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதேபோல், தொடர்ச்சியாக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளிலும் கொரோனா பெரும் அளவில் பரவியுள்ளது.

இந்நிலையில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைமலை, சேத்துமடை, காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார். அங்குள்ள மருத்துவர்களிடம் அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.

பின்னர் கம்மாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 25 முன்கள பணியாளர்களுக்கு, நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வழங்கினார். சுகாதாரப் பணியாளர்கள் விழிப்புணர்வுடன், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறினர்.

Updated On: 1 Jun 2021 1:59 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்