/* */

கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

வந்தே பாரத் ரயிலில் பயணிப்பதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரம் குறையும். ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கும்.

HIGHLIGHTS

கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்
X

வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம் 

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. இதுவரை இந்தியா முழுவதும் 35 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்துக்கான முதல் வந்தே பாரத் ரயில் கோவை-சென்னை இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நெல்லை-சென்னை இடையேயும் ரயில் இயக்கப்படுகிறது.

கோவை-சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதை போன்று, கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று தற்போது கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 30ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

இதற்கான தொடக்க விழா கோவை சந்திப்பு ரயில் நிலையத்தில் நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்தபடி காணொலி வாயிலாக கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

கோவையில் இருந்து புறப்படும் ரயில் சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு செல்கிறது. கோவையில் இருந்து பெங்களூரு 380 கி.மீ தூரத்தில் உள்ளது. சாதாரண ரயில்களில் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல 7 மணி நேரம் வரை ஆகும்.

இந்த வந்தே பாரத் ரயிலில் பயணிப்பதன் மூலம் பயணிகளின் பயண நேரம் 2 மணி நேரம் குறைந்து விடும். அதன்படி 5 மணி 40 நிமிடத்தில் ரயில் பெங்களூருவுக்கு சென்றுவிடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் உள்ளன. இதில் 32 இருக்கைகள் கொண்ட ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார், தலா 72 இருக்கைகள் கொண்ட 5 ஏ.சி. சேர் கார் பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.

இதுதவிர என்ஜினுடன் இணைந்த வகையில் மேலும் 2 ஏ.சி. சேர் கார் பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 40 இருக்கைகள் உள்ளது.

இந்த ரயிலில் உணவு, ஸ்நாக்ஸ் உடன் கூடிய ஏ.சி. சேர் கார் டிக்கெட் கட்டணம் ரூ.1000-ம் ஆகவும், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் டிக்கெட் ரூ.1,850 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை 30ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டாலும், இதன் தொடர் சேவையானது ஜனவரி 1ம் தேதி முதல் கோவையில் இருந்து இயக்கப்படும்.

காலை 6.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூரை சென்றடையும். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. இதற்காக நேற்று கோவை ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இதில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே இருந்தனர்.

கோவையில் இருந்து 5.30 மணிக்கு புறப்பட்ட ரயில் காலை 7.40 மணிக்கு ஓமலூர் ரயில் நிலையத்திலும், 8.30 மணிக்கு தருமபுரியிலும், 10.03 மணிக்கு ஓசூர் ரயில் நிலையத்திற்கும் சென்று, அதன்பின்னர் 11.30 மணிக்கு பெங்களூருவை சென்றடைந்தது.

கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அறிந்து கோவை மக்களும், தொழில் முனைவோர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Updated On: 2 Jan 2024 7:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?