/* */

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு: திமுகவினர் கொண்டாட்டம்

எஸ்ஐஎச்எஸ் காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணியை முடிக்க ரூ29 கோடி நிதி ஒதுக்கி அரசாணையை வெளியிடப்பட்டது.

HIGHLIGHTS

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு: திமுகவினர் கொண்டாட்டம்
X

இனிப்புகள் வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியை திருச்சி சாலையுடன் இணைக்க ரயில்வே மேம்பாலத்தை திமுக அரசு அப்போதைய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. மேம்பாலத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் சர்வீஸ் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்ற போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் மேம்பால பணிகள் தடைபட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் மேம்பால பணிகள் நடைபெறவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மேம்பால பணிகளை முடித்திட வலியுறுத்தி கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் மேம்பாலம் பணிகள தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளிக்கபட்டது.

இந்நிலையில் எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணியை முடிக்க ரூ29 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை வரவேற்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Updated On: 30 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  5. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  7. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  9. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  10. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்