/* */

ஆசிட் வீச்சில் காயம் அடைந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி

ஆசிட் வீசியதில் உடலில் 80 சதவீதம் காயங்கள் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் கவிதாவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆசிட் வீச்சில் காயம் அடைந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி
X

கோவை நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றியவர்

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). இவரது மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா, தனது கணவர் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கவிதா மீது கோவை காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டில் நடந்த திருட்டு வழக்கு ஒன்று கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜர் ஆவதற்காக கவிதா கடந்த மாதம் 23-ம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தார்.

நீதிமன்றத்தில் உள்ள அறையில் அவர் அமர்ந்து இருந்தபோது அங்கு அவரது கணவர் சிவக்குமார் குழந்தைகளையும், தன்னையும் தவிக்க விட்டுச் சென்றது பற்றி கேட்டு அவர் தகராறில் ஈடுபட்டார். திடீரென தான் கொண்டு இருந்த ஆசிட்டை எடுத்து கவிதாவின் மீது ஊற்றினார். இதில் கவிதாவின் உடல் முழுவதும் காயம் அடைந்து துடிதுடித்தார். உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிட் வீசியதில் உடலில் 80 சதவீதம் காயங்கள் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் கவிதாவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மெல்ல, மெல்ல அவர் உடல்நிலை தேறி வருகிறார். சிகிச்சையின் ஒரு பகுதியாக கவிதாவுக்கு உடலில் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் கவிதாவிற்கு உடலில் பல இடங்களில் ஆசிட் வீச்சு காயங்கள் ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி வசதி உள்ளதால் அவருக்கு உயர்தர சிகிச்சை இங்கேயே வழங்கப்பட்டு வருகிறது.

உடலின் ஒரு பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு உள்ளது. இதில் அவர் நன்கு உடல் நலம் தேறி வருகிறார். அடுத்தக்கட்டமாக அவருக்கு மேலும் சில இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறினர்

Updated On: 2 April 2023 7:06 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?