/* */

கோவை வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது

கோவை வனப்பகுதியில், உடும்பு வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கோவை வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது
X

உடும்பு வேட்டையாடிய இருவர்

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிமார் கோவில் சராகப் பகுதியில், வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நபர்கள், உடும்பை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். வேட்டையாடிய மூன்று உடும்புகள் மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டன.

தப்பியோடிய இருவரையும் கண்டுபிடிக்க, தனிக் குழுக்கள் அமைத்து, தொடர் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதில் பிளிச்சி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த இராஜேந்திரன் (41), மணி (42) ஆகியோரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வேட்டையாடியதை இருவரும் ஒப்புக் கொண்டதோடு, வனப்பகுதியில் வேட்டையாடிய இடம் மற்றும் வெட்டுக் கத்தியை மறைத்து வைத்த இடம் ஆகியவற்றை அடையாளம் காட்டினர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 7 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!