/* */

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக மாறும் கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி மாறி வருவதை கண்டு மக்கள் வியந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக மாறும் கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி
X

ஏரியில் உள்ள வெளிநாட்டு பறவையான தாழைக்கோழி

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை அடுத்து அக்ரஹார சாமக்குளம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று பரந்து விரிந்து உள்ளது. இந்த ஏரியினை கௌசிகா நீர் கரங்கள் அமைப்பு மற்றும் அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கடந்த சில வருடங்களாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த தொடர் கனமழையின் காரணமாக இந்த 165 ஏக்கர் பரப்பளவுள்ள அக்ரஹார சாமக்குளம் ஏரி முழுவதுமாக நிரம்பி வழிந்தது. இதனால் அக்ரஹார சாமக்குளம், கோவில் பாளையம், கீரணத்தம், கொண்டையம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக 165 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டி குழுவினர் இக்குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தாழைக்கோழி எனப்படும் அரிய வகை வெளிநாட்டு பறவைகள், இந்த ஏரியில் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன. இதனால் கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் நாள்தோறும் இந்த அக்ரஹார சாமக்குளத்தினை பார்வையிட்டு ஏரியின் அழகை கண்டு ரசிப்பதோடு, வெளிநாட்டு பறவையினங்களையும் கண்டு வியந்து வருகின்றனர்.

Updated On: 28 Feb 2024 12:49 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்