/* */

திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன போலீசார்

இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர்.

HIGHLIGHTS

திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன போலீசார்
X

திருக்குறள் ஒப்புவித்த இளைஞர்கள்.

கோவை மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது ஜமாப் இசைக்கு ஏற்ப இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து இரு தரப்பையும் சேர்ந்த 10 பேரைப் பிடித்து விசாரணைக்காக மதுக்கரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து, உதவி ஆய்வாளர் கவியரசன் தலைமையில் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 100 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தால், வீட்டிற்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர். இதையடுத்து அனைவருக்கும் அறிவுரை வழங்கிய காவல்துறையினர், அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 28 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  2. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  6. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  7. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  8. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  9. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  10. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...