/* */

ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்று வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

HIGHLIGHTS

ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...
X

கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நடைபெறும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். திமுகவினர் நேரடியாக செய்யும் விதி மீறல்கள் குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும். ஆளுங்கட்சியான திமுக வாக்காளர்களை அழைத்து அடைத்து வைத்து அவர்களுக்கு சாப்பாடு போடுகிறது.

அங்கு நடைபெறும் குளறுபடிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பகிரங்கமாக தேர்தல் விதிமுறைகள் மீறப்படும் சூழலில் பலமுறை இந்த விதிமுறைகள் குறித்து தான் பேசியும் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அத்துமீறிய நடவடிக்கைகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்று வருகிறது. ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து ஆளுங்கட்சியினர் முழுக்க முழுக்க விதிமீறலில் ஈடுபடுகின்றனர்.

மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. நாட்டின் முதல்வர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக டெபாசிட் இழக்கும் என முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

வாக்காளர்கள் தான் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என முடிவு செய்து வாக்களிப்பார்கள். ஸ்டாலின் ஓட்டு போட போவதில்லை. மேலும் மக்கள் என்ன தீர்ப்பு கொடுப்பார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரியவரும்.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தற்போது எழுச்சியோடு ஈரோடு இடைத்தேர்தலில் பிரம்மாண்டமாகவும் கடுமையாகவும் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். இதேபோல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தி பொதுசெயலாளர் தேர்வு தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் கூடி பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Updated On: 25 Feb 2023 5:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...