Begin typing your search above and press return to search.
கோவை மாநகர்கவுண்டம்பாளையம்கிணத்துக்கடவுமேட்டுப்பாளையம்பொள்ளாச்சிசிங்காநல்லூர்சூலூர்தொண்டாமுத்தூர்வால்பாறை
கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை
தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது
HIGHLIGHTS
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாலட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
அதேசமயம் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுகின்றன. தடுப்பூசி வந்த பின்னர் அப்பணிகள் மீண்டும் நடப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். அரசு கூடுதலாக தடுப்பூசிகளை ஒதுக்கி தடுப்பூசிகளை போட வேண்டும் என்பது கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.