/* */

கோவை மாநகராட்சியில் கூடுதலாக 25 தற்காலிக மருத்துவர்கள் நியமனம்

கொரோனா பரவலை தடுக்கவும், கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

HIGHLIGHTS

கோவை மாநகராட்சியில் கூடுதலாக 25 தற்காலிக மருத்துவர்கள் நியமனம்
X

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி பகுதி கொரோனா பரவலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கவும், கூடுதல் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகர்புற ஆரம்ப நிலையங்கள் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்ற தற்காலிக மருத்துவர்களை நியமிக்க மாநகராட்சி முடிவெடுத்தது. இதற்காக மருத்துவர்களை தேர்வு செய்ய நேற்று நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் 25 மருத்துவர்கள் தகுதி பெற்றனர். 3 மாதங்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தற்காலிக மருத்துவர்களுக்கான பணி ஆணையை வழங்கினார்.

Updated On: 1 Jun 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு