/* */

கோவையில் ஜவுளிக் கடைக்கு சீல்

கோவையில் கொரோனா விதமுறைகளை மீறிய ஜவுளிக்கடையை மாநகராட்சிஅதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

கோவையில்  ஜவுளிக் கடைக்கு சீல்
X

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வருகின்ற 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், நகைக்கடைகள், தியேட்டர்கள் ஆகியவை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோவை ஒப்பணகார வீதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பின்புறம் உள்ள கதவை திறந்து வாடிக்கையாளர்கள் உள்ளே அனுப்பி வியாபாரம் செய்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக இது தொடர்ச்சி யாக நடந்து வந்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் ஜவுளிக்கடைக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது பின் பக்கம் வழியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பி வியாபாரம் செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் கொரோனா ஊரடங்கை மீறி கொரோனா தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டு வந்த அந்த ஜவுளிக்கடையை பூட்டி சில் வைத்தனர்.

Updated On: 14 May 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?