/* */

தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் விதிமீறல்? கோவைவாசிகள் கடுப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் விதிமீறல் நடப்பதாகவும், குறுக்குவழியில் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் விதிமீறல்? கோவைவாசிகள் கடுப்பு
X

கோவையில், தடுப்பூசி முகாம் ஒன்றில் ஊசி போட டோக்கன் பெற்று வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

கோவை மாவட்டத்தில், மாநகர் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநகர் பகுதியில் 46 மையங்களில் தலா 200 தடுப்பூசிகள் வீதம் பொதுமக்களுக்கு போடப்பட்ட வருகிறது. அதிகாலை 4 மணியில் இருந்தே தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை வாங்கிக்கொண்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 243 பேர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள ஆர்வமாக இருந்தாலும், குறைவான தடுப்பூசிகளை அரசு ஒதுக்குவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால், தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும், தடுப்பூசிகளுக்கு வழங்கப்படும் டோக்கன்களில் விதிமீறல் இருப்பதாகவும், மூன்று நாட்களுக்கு மேலாக அலைந்த பிறகுதான் தடுப்பூசி கிடைத்ததாகவும், பொதுமக்கள் பலர் அதிருப்தியோடு தெரிவித்தனர். நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்றாலும், குறுக்கு வழியில் சிலர் தடுப்பூசி போட்டுச் செல்வதை அதிகாரிகள் அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், இதை உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 29 Jun 2021 10:44 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை