/* */

கோவையில் மாணவியை கடத்தி திருமணம் : வாலிபர் கைது

கோவையில் பிளஸ் ஒன் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோவையில் மாணவியை  கடத்தி திருமணம்  : வாலிபர் கைது
X

கோவையில் பிளஸ் ஒன் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி இ.பி காலனியை சேர்ந்தவர் பாபு ( 21). அங்குள்ள மட்டன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது, பிளஸ் 1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு பாபு, அந்த மாணவியை திருமண ஆசை காட்டி பழனிக்கு கடத்திச் சென்று அங்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞர் மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. அதனால், பாபுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Updated On: 5 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!