/* */

பணப்பட்டுவாடா - பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

பணப்பட்டுவாடா - பாஜகவினர் மீது வழக்குப்பதிவு
X

கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக பாஜகவினர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மநீம வேட்பாளர் கமல்ஹாசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் சலீவன் வீதி பகுதியில் பா.ஜ.க வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்த பா.ஜ.கவை சேர்ந்த நபர்களை கலைந்து போகும் படி சொன்ன போது, அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த பா.ஜ.கவினர் கருணாகரன், சேகர் உட்பட 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 6 வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் அவர்களிடம் இருந்து 46ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 1000 மற்றும் 500 ரூபாய் பரிசு கூப்பன்கள், பா.ஜ.க தொப்பிகள், கொடிகள், வாக்காளர் பட்டியல், காசோலைகள், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 12 பேரை மட்டும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். 6 வாகனங்கள் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 April 2021 4:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!