/* */

கோயிலுக்கு உண்டியலில் சேமித்த பணம்... கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்!

கோவையில், கோயிலுக்கு செல்வதற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய சிறுவனை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோயிலுக்கு உண்டியலில் சேமித்த பணம்... கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்!
X

கோவை கே.கே. புதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ என்ற சிறுவன், அப்பகுதி பள்ளியில் ௬ம் வகுப்பு படித்து வருகின்றான். ஸ்ரீ கோயிலுக்கு செல்ல அவ்வப்போது பெற்றோர்கள் தந்த காசை உண்டியலில் சேர்த்து வைத்துள்ளான்.

அவ்வகையில், ஸ்ரீ சேர்த்து வைத்த பணத்தை கோயிலுக்கு தர நினைத்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும்படி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, சிறுவன் ஸ்ரீ, தான் கோயிலுக்கு செல்ல சேர்த்த உண்டியல் பணம் ரூ.2500-ஐ, தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்தான். அதன்படி, தனது தந்தையின் மூலம் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிவாரண நிதி வழங்கியுள்ளான். அச்சிறுவனை கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்பட பலரும் பாராட்டினர்.

Updated On: 27 May 2021 6:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்