/* */

ஹெலிகாப்டர் விபத்தின் போது நடந்தது என்ன?: வீடியோ எடுத்த போட்டோகிராபர் பேட்டி

ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விபத்தின் போது நடந்தது என்ன?: வீடியோ எடுத்த போட்டோகிராபர் பேட்டி
X

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ஜோ என்கிற குட்டி.

முப்படை தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியது. இந்த வீடியோவை பனி மூட்டத்தால் மலைப் பகுதியில் தாழ்வாக செல்வதும் தொடர்ந்து சற்று நேரத்தில் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் அந்த வீடியோவை எடுத்தவர்கள் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோ என்கிற குட்டி மற்றும் அவருடைய நண்பர் நாசர் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது குறித்து பேட்டியளித்த ஜோ, நான் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர் நாசர் மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகளுடன் காட்டேரி வனப்பகுதியில் சுற்றுலா சென்றோம். அப்பகுதி நன்றாக இருக்கும் என்றும் நண்பர்கள் இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றோம். சரியாக டிசம்பர் 8ம் தேதி 12.15 மணிக்கு திடீரென ஹெலிகாப்டர் ஒன்று வந்ததால் என்னுடைய மொபைலை எடுத்து வீடியோ எடுத்தேன். ஹெலிகாப்டர் மிகுந்த சத்தத்துடன் வந்ததாலும், நேரில் பார்ப்பதாலும் வியப்பில் வீடியோ எடுத்தேன். பின்பு சிறிது நேரத்தில் விழுந்தது போல் சத்தம் கேட்டது. என்னுடைய நண்பர் நாசர் விழுந்து விட்டதா என கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்றேன். மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

பின்பு அங்கிருந்து நாங்கள் காரில் கிளம்பும் போது 15 நிமிடத்தில் அங்கு ஒரு போலீஸ் ஜீப் ஒன்று வந்தது. அவரிடம் கேட்டதற்கு இங்கே நிற்க வேண்டாம் புறப்படுங்கள் எனக் கூறினார். தொடர்ந்து நானும் என்னுடைய நண்பர் குடும்பத்தினரும் அங்கிருந்து ஊட்டிக்கு புறப்பட்டோம். பின்பு இரவு தான் டிவி பார்த்து தகவலை தெரிந்து கொண்டோம். அதன் பிறகு அன்று இரவே நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கிருந்து காவல் நிலையத்திற்கு போக சொன்னார்கள். அதன் பிறகு தான் போலீசார் எங்கள் வீடியோவை வெளியிட்டனர் என அவர் தெரிவித்தார்.

Updated On: 10 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?