/* */

கழுத்தில் மாலையுடன் காதல் ஜோடி போலீஸ் ஐ.ஜி அலுவலகத்தில் தஞ்சம்

கழுத்தில் மாலையுடன் காதல் ஜோடியினர் கோவை போலீஸ் ஐ.ஜி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

HIGHLIGHTS

கழுத்தில் மாலையுடன் காதல் ஜோடி போலீஸ் ஐ.ஜி அலுவலகத்தில் தஞ்சம்
X

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரவீன்குமார் நதியா ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா செட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). மர வேலைப்பாடுகள் செய்யும் பிரவீன்குமாரும் ஓசூரை அடுத்த சாமனப்பள்ளி பகுதியை சேர்ந்த நதியா(19)-வும் சிறுவயது முதலே நண்பர்கள். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக 12ஆம் வகுப்பை நிறைவு செய்த நதியாவை மேல்படிப்பிற்கு அனுப்பாத பெற்றோர்கள் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இன்று கோவை வந்தடைந்தனர்.

இருவரும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் முன்னிலையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்த மாலையுடன் கோவை பந்தயச்சாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் மாற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் தங்களது பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

Updated On: 25 May 2022 4:38 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்