/* */

காரில் கதறிய காதல் ஜோடி: காப்பாற்றிய காவலர்: கோவையில் பரபரப்பு

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

காரில் கதறிய காதல் ஜோடி: காப்பாற்றிய காவலர்: கோவையில் பரபரப்பு
X

சாலையில் கதறிய தம்பதி விக்னேஷ்வரன்-சினேகா.

கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்பரும், சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சினேகா (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை பெண் வீட்டார், இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். லஷ்மி மில்ஸ் சிக்னல் அருகில் சென்று கொண்டு இருந்த போது, காரில் ஏறிய சிலர் காதல் தம்பதியை மிரட்டி தாக்க முயற்சித்ததாக தெரிகிறது.

இதனால் அச்சத்தில் உறைந்த காதல் தம்பதி, தங்களை கொலை செய்ய முயற்சிப்பதாக கதறியழுது கூச்சல் போட்டு காரில் இருந்து இறங்க முயற்சித்தனர். அங்கிருந்த போக்குவரத்து காவலர் இருவரையும் மீட்டு, பந்தய சாலை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காதல் தம்பதி மற்றும் அவர்களை கடத்த முயன்ற பெண்களின் உறவினர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியை பெண் வீட்டார் கத்தி முனையில் நிறுத்தி கடத்த முயன்றதை வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

Updated On: 3 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்